Sunday 19th of May 2024 02:47:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 12பேருக்கு கொரோனா!

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 12பேருக்கு கொரோனா!


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளது.

நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60க்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 12 உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் தற்காலிகமாக பொதுமக்களுக்கான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 12பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது குறித்த பிரதேசத்தில் எல்லை மீறிச்செல்லும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

தற்போது உள்ள தொற்றானது கடந்த தொற்றுக்களை விட வீரியம் கூடியதாகவும் இளம் வயதினரை அதிகளவில் தாக்கும் நிலை காணப்படுவதனால் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE